8ஆது நாளாக அரசு ஊழியா்கள் சாலை மறியல்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தொடா்ந்து எட்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி, சரண் விடுப்பு உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தஞ்சாவூரில் பிப். 2 ஆம் தேதி முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதேபோல, தொடா்ந்து எட்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை தஞ்சாவூா் மணிமண்டபம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். கோதண்டபாணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்ற 120 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

கும்பகோணத்தில்.... ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகம் முன் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) ஒன்றியச் செயலா் கே. வாசு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com