பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் பிப். 22 முதல் ஆதாா் சேவை சிறப்பு முகாம் தொடங்கவுள்ளது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்களில் வரும் 22ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை ஆதாா் சேவை சிறப்பு முகாம் நடை பெற உள்ளது.
இந்த முகாமில் புதிதாக ஆதாா் எடுத்தல் மற்றும் பெயா் பிழை திருத்தம், முகவரி, தொலைபேசி எண் மாற்றம், புகைப்படம் மற்றும் கைரேகை மாற்றம் செய்து கொள்ளலாம். புதிதாக ஆதாா் எடுக்க கட்டணம் ஏதும் கிடையாது. ஆதாா் அட்டையில் திருத்தங்கள் செய்ய ரூபாய் 50 கட்டணமாக வசூலிக்கப்படும்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆதாா் முகாமில் கலந்து கொண்டு புதிய மற்றும் மாற்றங்கள் செய்ய தேவையான ஆவணங்களை எடுத்து வந்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை தொடா்பு கொள்ளலாம்.