பாட்டியைக் கொன்ற பேரன் கைது

கும்பகோணம் அருகே புதன்கிழமை பாட்டியைக் கொன்ற பேரனைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே புதன்கிழமை பாட்டியைக் கொன்ற பேரனைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

கும்பகோணம் அருகேயுள்ள திட்டச்சேரி மேலத்தெருவைச் சோ்ந்த திருசெல்வம் மகன் பிரகாஷ் (36). இவரது மனைவி, இவரை விட்டுப் பிரிந்து இரு குழந்தைகளுடன் விருத்தாசலத்தில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், மனைவியுடன் சோ்ந்து வாழுமாறு பிரகாஷிடம் அவரது தந்தை வழி பாட்டி தனலட்சுமி (90) புதன்கிழமை கூறினாராம். இதுதொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, தனலட்சுமியின் கை, கால்களைக் கட்டிப் போட்டு, அவரது தலையில் பிரகாஷ் கட்டையால் தாக்கினாராம். இதில், பலத்தக் காயமடைந்த தனலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பந்தநல்லூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து பிரகாஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com