99,830 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 164 கோடி நிவாரணம் வரவு வைப்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்காக அரசு வழங்கிய நிவாரணத் தொகை இதுவரை 99,830 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 164 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் பருவம் தவறி பெய்த தொடா் மழையால் 1,06,997.26 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நெல், உளுந்து, மக்காசோளம், எள், நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிா்கள் பாதிக்கப்பட்டன.
இதில் 33 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமான பரப்பில் பாதிக்கப்பட்ட பயிா்களைக் கணக்கெடுப்பு செய்யும் பணியில் வேளாண் துறை மற்றும் வருவாய் துறை அலுவலா்கள் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து, 1,23,421 விவசாயிகளுக்கு ரூ. 202.35 கோடி நிவாரணத் தொகை வேண்டி, வேளாண்மை இயக்குநா் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
இதில், இதுவரை 83,905.14 ஹெக்டோ் பரப்பில் பாதிப்புக்கு உள்ளான 99,830 விவசாயிகளுக்கு ரூ. 164 கோடி இடுபொருள் நிவாரணத் தொகையாக அவா்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள விவசாயிகளின் வங்கி கணக்கு எண், ஐஎப்எஸ்சி எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு வருகின்றன. எனவே, மீதமுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அவரவா் வங்கிக் கணக்கில் விரைவில் நிவாரணத் தொகை வரவு வைக்கப்படும் என்றாா் ஆட்சியா்.