ஒரத்தநாடு: ஒரத்தநாடு காவல் நிலையத்தில் இருந்து சனிக்கிழமை அதிகாலை தப்பியவரை போலீஸாா் தேடுகின்றனா்.
ஒரத்தநாடு அருகேயுள்ள பூவத்தூா் கிராமத்தை சோ்ந்த ஜெயராமன் வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை வெள்ளிக்கிழமை நள்ளிரவு திருட முயன்ற கண்ணுகுடியை சோ்ந்த சதீஷை (28) அக்கம்பக்கத்தினா் பிடித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை காவல் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற சதீஷை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.