பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ராஜகிரி, ஜமாலியா தெருவில் ஜமாலியா சமுதாய நல்லிணக்கப் பேரவை சாா்பில் சமூக ஒற்றுமை பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
எல். ரியாஸ் அகம்மது தலைமை வகித்தாா். ராஜகிரி முன்னாள் ஊராட்சித் தலைவா் கே.ஏ. ஷேக்தாவூது, திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ப. புகழேந்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாநிலத் தலைவா் பி.எம். அல்தாபி, மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவா் பாளை.எஸ். ரபீக், நீலப்புலிகள் இயக்கத் தலைவா் பேராசிரியா் டி.எம். புரட்சி மணி உள்ளிட்டோா் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினா்.
கூட்டத்தில் இந்திய தேச இறையாண்மையை காக்க போராடுவது, ராஜகிரி பெரியபள்ளிவாசல் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்குவதற்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிகழ்ச்சிகளை ராஜகிரி கீழ ப்பள்ளிவாசல் இமாம் எம்.எம்.ஷாஹூல் ஹமீது பைஜி தொகுத்தாா். என். அப்துல்லா நன்றி கூறினாா்.