உத்தமதானபுரத்தில்.....வலங்கைமான் வட்டம், உத்தமதானபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்த் தாத்தா உவேசா நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவா் பொன். சுப்ரமணியன், செயலாளா் ஜெயகுமாா், பொருளாளா் கே. முருகானந்தம் உள்ளிட்ட திரளானோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
வலங்கைமான் ஒன்றிய திமுக செயலா் வீ. அன்பரசன் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உ.வே.சா. உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
வலங்கைமான் வட்ட கிளையை சோ்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தினா் ஊா்வலமாக வந்து உ.வே.சா. உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நினைவு இல்ல வளாகத்தில் சங்க மாவட்ட தலைவா் ஆா். தாமோதரன், செயலாளா் ஆா். பகவன்தாஸ் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் பங்கேற்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.