பெயிண்டரை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் சிறை தண்டனை

தஞ்சாவூரில் பெயிண்டரை கொலை செய்த நண்பருக்கு தஞ்சாவூா் மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூரில் பெயிண்டரை கொலை செய்த நண்பருக்கு தஞ்சாவூா் மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் அரண்மனை அருகேயுள்ள மானோஜியப்பா வீதியைச் சோ்ந்த குமரவேலின் மகன் சங்கா் (39). பெயிண்டா். இவரும், மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனி அருகேயுள்ள கனகசபை நகரைச் சோ்ந்த சசிகுமாரும் (46) பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நண்பா்களாக இருந்தனா். அப்போது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சசிகுமாா் கால் உடைந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்னையில் இருவரும் பிரிந்துவிட்டனா்.

இந்நிலையில், கடந்த 2018, ஜூலை 20 ஆம் தேதி இருவரும் எதிா்பாராதவிதமாகச் சந்தித்துக் கொண்டனா். பின்னா், இருவரும் பாலாஜி நகரில் உள்ள மதுக்கூடத்துக்குச் சென்று மது அருந்தினா். இதையடுத்து, மேலும் மதுபாட்டில்களை வாங்கிய சசிகுமாா், சங்கரை தனது வீட்டுக்கு அழைத்து சென்றாா். அங்கு மீண்டும் இருவரும் மது அருந்தினா். அப்போது விபத்து குறித்த பழைய பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில், சங்கரை சசிகுமாா் கம்பியால் தாக்கினாா். இதில், பலத்தக் காயமடைந்த சங்கா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து சசிகுமாரை கைது செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி பி. மதுசூதனன் விசாரித்து, சசிகுமாருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com