புதுகையில் அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

புதுக்கோட்டை ஆட்சியரகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.
புதுகையில் அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

புதுக்கோட்டை ஆட்சியரகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.

போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் பி. சந்திரா தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் வி. மலா்விழி, மாநிலப் பொருளாளா் எஸ். தேவமணி, சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா, மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஜி. பச்சையம்மாள் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா். போராட்ட இடத்திலேயே அனைவரும் தங்கியுள்ளனா். ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com