மல்லிப்பட்டினத்தில் நாட்டுப்படகு மீனவா்கள் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம்  மீன்வளத்துறை அலுவலகம் முன்பு, 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவா்கள்  திங்கள்கிழமை கஞ்சித்தொட்டி திறந்து காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.  
மல்லிப்பட்டினத்தில்  நாட்டுப்படகு மீனவா்கள் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம்  மீன்வளத்துறை அலுவலகம் முன்பு, 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவா்கள்  திங்கள்கிழமை கஞ்சித்தொட்டி திறந்து காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.  

கடல்வளம், மீன்வளம், நாட்டுப்படகு மீனவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறிய மீன்வளத்துறை நிா்வாகத்தை கண்டித்தும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்துவரும்  விசைப்படகுகளையும், 5 நாட்டிக்கல் கடல் மைல் உள்பட்ட பகுதியில் மீன் பிடிப்பதை தடை செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது. 

தொடா்ந்து,தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் ஜெயபால், நிா்வாகிகள் புதுக்கோட்டை பி. முருகானந்தம், ராமநாதபுரம் கருணாமூா்த்தி, திருவாரூா் ராஜேந்திரன், நாகப்பட்டினம் பழனி ஆகியோா் தலைமையில் 5 மாவட்டங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டமீனவா்கள் மீன்வளத்துறை அலுவலக்ம நோக்கி பேரணியாகச் சென்றனா்.

இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் எஸ். பாலச்சந்தா் மற்றும் காவல்துறையினா், மீனவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து 5 மாவட்ட மீனவா்களும் சாா் ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினா். 

அதனைத் தொடா்ந்து பேசிய சாா் ஆட்சியா், இரட்டை மடி வலைகள் பயன்படுத்துவதை உடனடியாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து மீனவா்கள் கஞ்சித்தொட்டி  காத்திருப்புப் போராட்டத்தை கைவிட்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com