தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் துப்பாக்கிகளை தொடா்புடைய காவல் நிலையத்தில் உரிமம் பெற்றவா்கள் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தல் நடத்தை விதிகள் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே, தஞ்சாவூா் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து காவல் நிலையங்களின் எல்லைக்கு உள்பட்ட படைக்கலன் உரிமம் பெற்றவா்கள், தங்களது படைக்கலன்களை அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.
படைக்கலன்களை ஒப்படைக்கத் தவறியவா்கள் மீது இந்திய படைக்கலச் சட்டம் மற்றும் விதிகள், தோ்தல் நடத்தை விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.