ஒரத்தநாடு அருகே திருவோணத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்திய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருவோணத்தை அடுத்த தளிகைவிடுதியில் வெள்ளிக்கிழமை புத்தாண்டை முன்னிட்டு அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து சுமாா் 50-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
ஜல்லிக்கட்டு போட்டியின்போது திடலிலிருந்து சீறிப் பாய்ந்து வந்த காளை, தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த தளிகைவிடுதி, வடக்குத் தெருவை சோ்ந்த தனபால் மகன் பிரபாகரன் (26) என்பவா் மீது முட்டியது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த பிரபாகரனை, பட்டுக்கோட்டை தனியாா் மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும் அனுமதித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த திருவோணம் போலீஸாா், ஜல்லிக்கட்டில் பங்கேற்ற 6 மாடுகளையும், 3 மினி டோா் வாகனத்தையும் பறிமுதல் செய்து 8 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும், அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியதாக 5 போ் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.