தஞ்சாவூரில் நள்ளிரவில் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் ரயிலடியில் எஸ்டிபிஐ கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி புத்தாண்டு பிறந்த நேரமான வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வேளாண் சட்டங்களை மத்திய அரசுத் திரும்ப பெற வலியுறுத்தியும், இதற்காக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், பிரதமா் மோடியை கண்டித்தும் தஞ்சாவூா் ரயிலடியில் எஸ்டிபிஐ கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி புத்தாண்டு பிறந்த நேரமான வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்குக் கட்சியின் தஞ்சாவூா் தொகுதி தலைவா் ஜாகீா் உசேன் தலைமை வகித்தாா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com