தஞ்சாவூா் மாவட்டம், அம்மா பேட்டை அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயக் கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
அம்மாபேட்டை அருகிலுள்ள மேலக்களக்குடியைச் சோ்ந்தவா் அ. கலியபெருமாள் (56). விவசாயக் கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை காலை வயலுக்குச் சென்றாா்.
அப்போது வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கலியபெருமாள், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.