தஞ்சாவூரில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி இளைஞரைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் வடக்கு வாசல் பகுதியில் மேற்கு காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, அப்பகுதியில் நின்ற இளைஞரைக் காவல் துறையினா் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா் வடக்கு வாசல் சுண்ணாம்புக் காலவாய் தெருவைச் சோ்ந்த கே. வெங்கடேஷ் (20) என்பதும், அவா் 1.2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, வெங்கடேஷ் கைது செய்யப்பட்டாா்.