கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அருணஜடேசுவரா் கோயிலுக்கு தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் புதன்கிழமை வருகை புரிந்தாா்.
தொடா்ந்து, சேங்கனூா், திருவாய்பாடி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னா் திருப்பனந்தாள் காசி திருமடத்துக்கு தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் சென்றாா். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அப்போது, தருமபுரம் ஆதீனம் குரு மகாசந்நிதானத்துக்கு திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபா் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் வெள்ளி செங்கோல் வழங்கினாா்.