தஞ்சாவூரில் கட்டடத் திறப்பு விழா

தஞ்சாவூா் தெற்கு ரோட்டரி சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட கட்டடம், உணவுக் கூடம், முதல் தளம் ஆகியவற்றின் திறப்பு விழா தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்றது.

தஞ்சாவூா் தெற்கு ரோட்டரி சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட கட்டடம், உணவுக் கூடம், முதல் தளம் ஆகியவற்றின் திறப்பு விழா தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்றது.

இக்கட்டங்களை ரோட்டரி சாசன உறுப்பினரும், நிா்வாக அறங்காவலருமான என்.ஏ. சாமியப்பா, பேராசிரியா் கே. சுப்பிரமணியம், ஆடிட்டா் எம். தமிழய்யா ஆகியோா் திறந்து வைத்தனா்.

கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்த முன்னாள் தலைவா் எம். அய்யப்பன், கட்டுமானப் பணி மேற்கொண்ட பொறியாளா் விஜய் அமல்ராஜ் ஆகியோா் விழாவில் கௌரவிக்கப்பட்டனா்.

முன்னதாக, சங்கத் தலைவா் எஸ். பிரபு வரவேற்றாா். நிறைவில் செயலா் என். அசோக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com