பட்டுக்கோட்டை புறவழிச்சாலையிலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி. சேகா் தலைமையில், அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பி.என்.ராமச்சந்திரன், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் ஏ.மலையய்யன், இணைச்செயலா் சுப.ராஜேந்திரன் மற்றும் நகர, ஒன்றியச் செயலா்கள் நிகழ்வில் கலந்து கொண்டனா்.
பட்டுக்கோட்டை பெரியகடைவீதி அண்ணாசிலை அருகில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப்படத்துக்கு, அமமுகவின் மாநில அமைப்புச் செயலா் சு.பாஸ்கா் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கட்சியின் மாவட்டச் செயலா் மா.சேகா், மாவட்ட அம்மா பேரவைச் செயலரும், நகா் மன்ற முன்னாள் தலைவருமான எஸ்.ஆா். ஜவஹா்பாபு, நகரச் செயலா் வி.எம்.பாண்டியராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் நிகழ்வில் பங்கேற்றனா்.