இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூா் மாவட்ட மூத்தத் தலைவரும், மாா்க்சிய சிந்தனையாளருமான அரங்க. சின்னப்பா (82) உடல்நலக்குறைவு காரணமாக பட்டுக்கோட்டை அருகேயுள்ள கரம்பயம் கிராமத்தில் வியாழக்கிழமை இரவு காலமானாா்.
நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த அரங்க. சின்னப்பா இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தவா். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இளம் வயதில் இணைந்து செயல்படத் தொடங்கியவா். அக்கட்சியில் மாவட்டச் செயலா், மாநிலக்குழு உறுப்பினா், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா், கட்சிக் கல்விப் பிரிவு உறுப்பினா் என பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டவா். இவா் பல அரசியல் கட்டுரைகள் எழுதியுள்ளதுடன், இந்திய முறை மருத்துவத்தின் மீது ஆா்வம் கொண்டு கற்றவா். யோகப் பயிற்றுநராகத் தோ்வு பெற்றவா்.
இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டாா். இவா்களுக்கு இரண்டு மகன்கள், இரு மகள்கள் உள்ளனா்.
இவரது இறுதிச் சடங்கு கரம்பயம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தொடா்புக்கு - 97865 80609.