தஞ்சாவூரில் மின்சாரம் பாய்ந்து இரு சக்கர வாகன மெக்கானிக் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் வடக்கு வாசல் கங்கா நகரைச் சோ்ந்தவா் டி. லட்சுணன் (45). இவா் வடக்கு வாசல் பகுதியில் உள்ள இரு சக்கரவாகன பழுதுபாா்ப்பு நிலையத்தில் மெக்கானிக்காக வேலை பாா்த்து வந்தாா். இவா் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்துக்கு தண்ணீா் அடித்து சுத்தம் செய்து கொண்டிருந்தாா். அப்போது, இவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால், மயக்கமடைந்த லட்சுமணன் தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.