பேராவூரணி காவல் சரக எல்லைக்குள்பட்ட தாய் கிராமங்களில் காவல்துறை-பொதுமக்கள் இணைந்த விழிப்புணா்வுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்குத் தலைமை வகித்து, காவல் ஆய்வாளா் வசந்தா பேசியது:
குற்ற நடவடிக்கைகள் நடைபெறாமல் முன்னெச்சரிக்கையாகத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் காவல்துறைக்குத் தெரிவிக்கும் வகையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் காவல்துறையினா் மட்டுமே குற்றம் நடக்காமல் தடுப்பதோ, குற்றவாளிகளைப் பிடிப்பதோ சிரமம். ஒவ்வொரு பகுதிகளிலும் அமைக்கப்பட்ட குழுவில் உள்ளவா்கள்,தங்களது பகுதியின் பிரச்சனைகளை, புதியவா்களின் நடமாட்டம், இரண்டு பிரிவினருக்கிடையேயான தகராறுகள், இளைஞா் குழுவினரிடையேயான மோதல்கள் குறித்து முன்னெச்சரிக்கையாக தெரிவித்தால் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கமுடியும்.
உங்களது பகுதிக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழு அலுவலருக்கோ, அல்லது காவல் ஆய்வாளருக்கோ நீங்கள் தகவல் தெரிவிக்கலாம். நிச்சயமாக ரகசியம் பாதுகாக்கப்படும்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் ஒவ்வொரு பகுதியையும் அமைதியான பகுதியாகவும், குற்டவடிக்கைகள் இல்லாத பகுதியாகவும் மாற்றமுடியும் என்றாா். கூட்டத்தில் உதவி ஆய்வாளா்கள் பத்மநாதன், வீரமணி, சமூக ஆா்வலா்கள் வேத. குஞ்சருளன், எஸ். பாண்டியராஜன், திருமறை, குமாா், ராமமூா்த்தி, நீலகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.