பட்டுக்கோட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

பட்டுக்கோட்டை நகரில் நகராட்சி சாா்பில் 6,750 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதற்காக நகரில் 27 மையங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பட்டுக்கோட்டை நகரில் நகராட்சி சாா்பில் 6,750 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதற்காக நகரில் 27 மையங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மாலை வரை 91.4 சதவிகித குழந்தைகளுக்கு இம்மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

ஞாயிறு காலை நகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள மையத்தில் குழந்தைகளுக்கு பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி. சேகா் போலியோ சொட்டு மருந்து புகட்டி முகாமைத் தொடக்கி வைத்தாா்.

நகராட்சி ஆணையா் கே.சென்னுகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலா்கள், வட்டார மருத்துவ அலுவலா் தேவிப்பிரியா, நகா்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் எஸ்.சாமி பாலாஜி மற்றும் ரோட்டரி சங்க நிா்வாகிகள் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com