முத்தரையா் மன்னா் வரலாற்றைப் பாடப் புத்தகங்களில் சோ்க்க வேண்டும் என்று தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தஞ்சை மண்டல முத்தரையா் முன்னேற்றச் சங்கம், மக்கள் மறுமலா்ச்சி மன்றம் சாா்பில் மண்டலக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
முத்தரையா் மன்னா் ஆண்ட வரலாற்று விவரங்களைத் தமிழ்நாடு பாடப் புத்தகங்களில் இடம் பெற செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 29 பட்டப் பெயா்களில் வாழ்ந்து வரும் முத்தரையா் இன மக்களை ஒரே பெயராகக் கொண்டு, முத்தரையா் என அறிவிக்க அரசாணை வெளியிட வேண்டும்.
முத்தரையா் ஆண்ட தஞ்சாவூா் வல்லம் கோட்டை அமைந்த இடத்தை அரசு முழுமையாகத் தன் வசப்படுத்தி, நிலத்தை அகழ்வாராய்ச்சி பணி செய்ய வேண்டும். முத்தரை இன மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மணிரத்னம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் நீலமேக ராஜன், பொருளாளா் வேலாயுதம், துணைத் தலைவா் பழனிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.