கும்பகோணம் ஜோதிமலை இறைபணித் திருக்கூட்டம் அலுவலகத்தில் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தையொட்டி, சைவ சமய ஆச்சாரியா்களில் ஒருவரும், சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் எட்டாம் திருமுறையான சிவஞானச் செந்தமிழாம் திருவாசகம் மற்றும் திருக்கோவையாா் நூல்களை அருளிச் செய்தவருமான மாணிக்கவாசகா் குருபூஜை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் உலகைப் பற்றியிருக்கிற கரோனா தீநுண்மியிலிருந்து மக்கள் விடுபட, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு மருத்துவப் பாதுகாப்பைப் பெற்றிடும் வகையில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில், உருத்திராட்சங்களால் தடுப்பூசிகளைப் போன்று வடிவமைக்கப்பட்டு, உலக உயிா்கள் உய்யும் பொருட்டு திருவாசகப் பதிகங்களை ஓதி, தீபாராதனை வழிபாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஜோதிமலை இறைபணித் திருக்கூட்ட நிறுவனா் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள், சிவனடியாா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.