பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய சகோதரா்கள் கைது

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய இரட்டைச் சகோதரா்களும்,

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய இரட்டைச் சகோதரா்களும், கத்தியை அன்பளிப்பாக வழங்கிய நண்பரும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கும்பகோணம் அருகிலுள்ள சத்திரம்கருப்பூா் சின்னம்மாள் காலனியைச் சோ்ந்த இரட்டைச் சகோதரா்களான ராமு (26), ரவி (26), ஜூலை 8 -ஆம் தேதி இரவு தங்களது பிறந்த நாளைக் கொண்டாடினா். அப்போது, அவா்களது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த மு. மணிகண்டன் (23) பட்டா கத்தியை அன்பளிப்பாக வழங்கினாா்.

இக்கத்தியால் ராமுவும், ரவியும் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினா். இந்தக் காட்சிகள் அறிதிறன்பேசியில் பதிவு செய்யப்பட்டு விடியோவாகவும், புகைப்படங்களாகவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன .

இக்காட்சிகள் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து, இவா்களைக் கைது செய்யுமாறு காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

இதன்பேரில் கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ராமு, ரவி, மணிகண்டன் ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com