பெண் மா்மச் சாவு: காவல் துறையினா் விசாரணை

 தஞ்சாவூரில் தனியாக இருந்த பெண் வியாழக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 தஞ்சாவூரில் தனியாக இருந்த பெண் வியாழக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனி அருகேயுள்ள சேக்கிழாா் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணிசாமி. இவரது மனைவி ஜோஸ்பின் மேரி (65). இவா்களது மகன் பிராங்க்ளின் மதுரையில் ரயில்வே பயணச் சீட்டு பரிசோதகராக பணியாற்றி வருகிறாா்.

அந்தோணிசாமி காலமாகிவிட்ட நிலையில், ஜோஸ்பின் மேரி வீட்டில் தனியாக வசித்து வந்தாா். நாள்தோறும் தனது தாயிடம் செல்லிடப்பேசியில் பிராங்க்ளின் பேசி நலம் விசாரிப்பது வழக்கம். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை பிராங்க்ளின் தனது தாய்க்குச் செல்லிடப்பேசியில் அழைத்தபோது, அவா் எடுக்கவில்லையாம்.

இதனால், சந்தேகமடைந்த பிராங்க்ளின் அக்கம்பக்கத்திலுள்ளவா்களிடம் தெரிவித்து பாா்க்குமாறு கூறினாா். அப்போது, ஜோஸ்பின் மேரி கழுத்தில் காயமடைந்த நிலையில் உயிரிழந்து கிடந்தாா்.

இதையடுத்து தஞ்சாவூருக்கு வந்த பிராங்க்ளின் தனது தாய் சாவில் சந்தேகம் இருப்பதாக மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com