பாபநாசம் அருகே பூட்டியிருந்த வீட்டில் பதிமூன்றரை பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலத்துறை வெள்ளைப் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகானந்தம் (50). இவரது குடும்பத்தினா் வெள்ளிக்கிழமை வெளியூா் சென்றிருந்த நிலையில், அவா் அப்பகுதியிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.
சிறிது நேரம் கழித்து முருகானந்தம் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவை திறந்து மா்ம நபா்கள் பதிமூன்றரை பவுன் நகைகளைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.