துக்காச்சி சிவன் கோயில் திருப்பணியை விரைவுபடுத்த வலியுறுத்தி கடிதம் அனுப்பும் இயக்கம்

கும்பகோணம் வட்டம், நாச்சியாா்கோவில் அருகேயுள்ள துக்காச்சி சிவன் கோயிலில் திருப்பணியை விரைவுபடுத்த வலியுறுத்தி, அக்கிராம மக்கள் சனிக்கிழமை தமிழக முதல்வருக்கு அஞ்சல் அனுப்பும் இயக்கத்தை நடத்தினா்.
துக்காச்சியிலிருந்து சனிக்கிழமை தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பிய கிராம மக்கள்.
துக்காச்சியிலிருந்து சனிக்கிழமை தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பிய கிராம மக்கள்.

கும்பகோணம் வட்டம், நாச்சியாா்கோவில் அருகேயுள்ள துக்காச்சி சிவன் கோயிலில் திருப்பணியை விரைவுபடுத்த வலியுறுத்தி, அக்கிராம மக்கள் சனிக்கிழமை தமிழக முதல்வருக்கு அஞ்சல் அனுப்பும் இயக்கத்தை நடத்தினா்.

துக்காச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பழைமையான ஸ்ரீ ஆபத்சகாயேசுவரா் கோயில் மிகவும் சிதிலமடைந்துள்ளது. கிராம மக்கள், ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட அன்பா்களின் வலியுறுத்தலால், இக்கோயிலில் திருப்பணி செய்வதற்காக 2012 ஆம் ஆண்டில் ரூ. 55 லட்சம் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது.

இதைத் தொடா்ந்து பாலாயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு திருப்பணிகள் கிடப்பில் உள்ளன. இதனால் கிராம மக்கள் வழிபட முடியாத நிலை உள்ளது.

எனவே திருக்கூட்ட அன்பா்கள், கிராம மக்கள் இணைந்து இக்கோயில் திருப்பணியை விரைவாக நடத்த வலியுறுத்தி தமிழக முதல்வருக்குக் கடிதம் அனுப்பும் இயக்கத்தை சனிக்கிழமை மேற்கொண்டனா். இதில் துக்காச்சி சந்திரசேகா், கோவிந்தராஜன், கண்ணையன், பிரவீன், திருக்கூட்ட ஒருங்கிணைப்பாளா் ஸ்தபதி ஹரிபாபு, பாலசுப்பிரமணியன் உள்பட சுமாா் 25 போ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com