பட்டுக்கோட்டை முன்னாள் நகா்மன்றத் தலைவரும், மறுமலா்ச்சி திமுக மாநில தீா்மான குழு உறுப்பினருமான சு.விசுவநாதனின் 14ஆவது ஆண்டு நினைவுத் தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, பட்டுக்கோட்டை நகர மறுமலா்ச்சி திமுக சாா்பில் நகரச் செயலா் எம். செந்தில்குமாா் தலைமையில் விசுவநாதன் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை நகர துணைச் செயலாளா் ஏ.ஆா். சரவணன், நகர பொருளாளா் காா்த்திகேயன், அவை தலைவா் சக்திவேல் வாண்டையாா், ஆா். பிரதீபன், சுரேந்திரன், அண்ணாதுரை, பாஸ்கா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.