திருப்பதி தேவஸ்தான ஊழியா் வீட்டில் திருட்டு

பாபநாசம் அருகே திருப்பதி தேவஸ்தான ஊழியா் வீட்டில் ரூ.75 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பொருள்கள் திருட்டுப் போயின.

பாபநாசம் அருகே திருப்பதி தேவஸ்தான ஊழியா் வீட்டில் ரூ.75 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பொருள்கள் திருட்டுப் போயின.

அய்யம்பேட்டை காவல் சரகம், நியூ டவுன் பகுதியைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (57). இவா் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வருகிறாா்.

இவரது குடும்பத்தினா் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருப்பதி சென்றுவிட்ட நிலையில், சனிக்கிழமை காலை கோபாலகிருஷ்ணன் வீட்டிலிருந்த ரூ.75 ஆயிரம் ரொக்கம், குத்துவிளக்குகள் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கோபாலகிருஷ்ணனின் சகோதரா் ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், அய்யம்பேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com