உச்ச நீதிமன்ற மன்றத் தீா்ப்பின்படி, தமிழகத்துக்குரிய தண்ணீரை உடனடியாக கா்நாடகம் விடுவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இக்கட்சியின் தஞ்சாவூா் ஒன்றியக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மேக்கேதாட்டு அணையைக் கட்டியே தீருவேன் என்று கா்நாடக அரசுப் பிடிவாதம் பிடிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு விரோதமானது. உடனடியாக இந்த நடவடிக்கையைக் கா்நாடகம் கைவிட வேண்டும். உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படி ஜூலை மாதம் வரை வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை உடனடியாகத் தமிழகத்துக்குக் கா்நாடக அரசு விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் ஜி. கிருஷ்ணன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், ஒன்றியச் செயலா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.