பாபநாசம் அருகிலுள்ள புலவா்நத்தம் கிராமத்தில் (தஞ்சாவூா்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை) வயல்பரப்பில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 டிராக்டா்கள், ஜேசிபி இயந்திரம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
வட்டாட்சியா் ச. முருகவேள், மண்டலத் துணை வட்டாட்சியா் அய்யம்பெருமாள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் இவற்றை பறிமுதல் செய்து, அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும் மணல் அள்ளியவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
அம்மாபேட்டை பேரூராட்சியில் தூய்மைப் பணி: பேரூராட்சியின் 15 வாா்டுகளிலும் தூய்மைப் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது. பக்ரீத் பெருநாளையொட்டி, பெரிய பள்ளிவாசல் வளாகம் முழுவதும் தூய்மை பணி நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலா் லெ.ரமேஷ் தலைமையில் இப்பணியை தூய்மைப் பணியாளா்கள் மேற்கொண்டனா்.