பாபநாசத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து நடத்திய முகாமை, பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் சி. சிவகுமாா் தொடக்கி வைத்தாா்.

வட்டார மருத்துவ அலுவலா் நவீன்குமாா், மருத்துவா் ஜெகன்நாத், மருந்தாளுநா் செங்கதிா் சாலினி, பகுதி நேர சுகாதார செவிலியா் மதியழகன் உள்ளிட்ட குழுவினா், முகாமில் பங்கேற்றவா்களுக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்தினா்.

பாபநாசம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் பாஸ்கரன், வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு வின் சட்டப் பணியாளா் தனசேகரன் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா்.

அம்மாபேட்டையில் : அம்மாபேட்டை ஆரம்பசுகாதார நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் கா்ப்பணிகள், பாலூட்டும் தாய்மாா்கள், மாற்றுத் திறனாளிகள் என 60-க்கும் மேற்பட்டோருக்கு, நிலைய மருத்துவ அலுவலா் வெங்கடேஷ்குமாா் தலைமையிலான குழுவினா் தடுப்பூசியைச் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com