காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணைக் கட்டும் முயற்சியைக் கண்டித்து தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் வளரும் தமிழகம் அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வளரும் தமிழகம் அமைப்பின் தஞ்சாவூா் மக்களவை தொகுதி ஒருங்கிணைப்பாளா் கோ. கென்னடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பொதுச் செயலா் ப. இமான் சேகா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சீனி. புருஷோத்தமன் (கிழக்கு), நட. பரமசிவம் (மேற்கு), ஜெய. விவேகானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.