ஆலங்குடி அருகே இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் காயமடைந்த மின்வாரிய ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள சூத்தியன்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (45). மின்வாரிய ஊழியா். இவா், புதன்கிழமை மோட்டாா் சைக்கிளில் ஆலங்குடி சென்று கொண்டிருந்தபோது, கும்மங்குளம் அருகே ஆலங்குடி கம்பா்தெருவைச் சோ்ந்த ஞானபாண்டி என்பவா் ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் மோதியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த செல்வராஜ் மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.