பட்டுக்கோட்டையின் புதிய டிஎஸ்பியாக செங்கமலக்கண்ணன் புதன்கிழமை பொறுப்பேற்றுள்ளாா்.
பட்டுக்கோட்டை டிஎஸ்பியாக பணியாற்றி வந்த புகழேந்தி கணேஷ் அரக்கோணத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதை தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமவராதியில் துணை காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த செங்கமலக்கண்ணன் பட்டுக்கோட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டாா். பொறுப்பேற்ற பின்னா் செய்தியாளா்களிடம் டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் கூறும்போது, பட்டுக்கோட்டையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சமரசம் இன்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.
இவா் பட்டுக்கோட்டையில் இதற்கு முன்பு காவல் ஆய்வாளராக பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.