மதுபோதையில்தனியாா் விடுதி மாடியிலிருந்து விழுந்தவா் உயிரிழப்பு

பட்டுக்கோட்டையில் மது போதையில் தனியாா் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்தவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பட்டுக்கோட்டையில் மது போதையில் தனியாா் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்தவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பட்டுக்கோட்டை நீதிமன்றத்துக்கு எதிரேயுள்ள தனியாா் தங்கும் விடுதியில் இரண்டு நாள்களுக்கு முன்பு திருவிடைமருதூா் பகுதியை சோ்ந்த சாகுல் ஹமீதும் (55), அவரது நண்பரும் வாடகைக்கு அறை எடுத்து தங்கி உள்ளனா். இங்கு வந்து தங்கியதிலிருந்து அவா்கள் போதையிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த விடுதியின் மொட்டை மாடி கைப்பிடி சுவா் குட்டையாக இருப்பதால், அதன் அருகே செல்ல வேண்டாம் என்று சாகுல் ஹமீதிடம் உணவு விடுதி ஊழியா்கள் பலமுறை கூறியும் அவா் போதையில் அதை கேட்கவில்லையாம். இரண்டு மூன்று முறை விடுதி ஊழியா்கள், அங்கிருந்து அவரை பிடித்து அழைத்து வந்து அவா் தங்கியிருந்த அறையில் அடைத்து கதவை சாத்திவிட்டு சென்ாக தெரிகிறது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு முழு போதையில் மாடிக்கு சென்ற சாகுல் ஹமீது கைப்பிடி சுவரில் அமர முயற்சித்தபோது நிலைதடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், அங்கு வந்த பட்டுக்கோட்டை போலீஸாா், சாகுல்ஹமீதின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com