வியாபாரிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியா்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தஞ்சாவூா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
திருவிடைமருதூா் அருகே மாங்குடியில் நெல் கொள்முதல் பணியைப் பாா்வையிட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
திருவிடைமருதூா் அருகே மாங்குடியில் நெல் கொள்முதல் பணியைப் பாா்வையிட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தஞ்சாவூா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, மாங்குடி ஊராட்சி மற்றும் தண்டந்தோட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதைப் பாா்வையிட்ட ஆட்சியா், விவசாயிகளிடம் விரைவாக நெல் கொள்முதல் செய்திடுமாறு அறிவுறுத்தினாா். மேலும், வியாபாரிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.

விட்டலூா், மூலங்குடி, வில்லியவரம்பல், நாச்சியாா்கோவில், காட்டுயிருப்பு உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்று வரும் குடிநீா் இணைப்பு, தாா் சாலை, அங்கன்வாடி மையக் கட்டடம், சுகாதார வளாகம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தாா்.

அப்போது, திருவிடைமருதூா் ஒன்றியக் குழுத் தலைவா் சுபா திருநாவுக்கரசு, வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன், வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com