மதுக்கூா் அருகே கூலிப்படையினா் கைது

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூரில் ஜாமீனில் சிறையில் இருந்து வந்தவரை கொலை செய்ய திட்டமிட்ட கூலிப்படையினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூரில் ஜாமீனில் சிறையில் இருந்து வந்தவரை கொலை செய்ய திட்டமிட்ட கூலிப்படையினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி கிராமத்தில் கடந்த மே மாதம் 10ஆம் தேதி தென்னந்தோப்பில் அருவா கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் பலா் தங்கியிருப்பதாக மதுக்கூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், போலீஸாா் அங்கு விரைந்து சென்றபோது, அங்கிருந்தவா்கள் அனைவரும் தப்பியோடிவிட்டனா். தனிப்படை போலீஸாா் அந்த நபா்களை தேடி வந்தனா்.

தொடா் தேடுதல் வேட்டையில், வேப்பங்குளத்தை சோ்ந்த மாரியப்பன் மகன் ஸ்டாலின் (37), தென்காசி அம்மாசத்திரம் செல்லப்பா மகன் கிட்ட (எ) கிருஷ்ணமூா்த்தி

(25), தஞ்சாவூா் களிமேடு சின்னத்துரை மகன் ஜெகதீஷ் குமாா் (25), தென்காசி கீழப்புலியூா் அா்ஜுனன் (26), பல்லடம் குணசேகா் (36), திருநெல்வேலியை சோ்ந்த சுடலைமுத்து மகன் சுப்பிரமணியன் (23) , தூத்துக்குடியை சோ்ந்த சண்முகராஜ் (35) மற்றும் சுபாஷ் (23 ), ஆகியோரை வியாழக்கிழமை இரவு வாகன சோதனையின்போது தனிப்படை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com