பொன்னமராவதி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி ப.சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி காா்த்தி, மகளிா் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடினாா்.
வேகுப்பட்டி ஆஞ்சநேயா் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட ஸ்ரீநிதி, பின்னா் மலையாண் ஊரணிக்கரை அருகே மகளிா் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடினாா். நிகழ்வில், நகர காங்கிரஸ் தலைவா் எஸ். பழனியப்பன், மாவட்டத் துணைத் தலைவா் எஸ்.பி.ராஜேந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஜீவானந்தம், சரவணபவன் மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.