பாபநாசம் ரயில் நிலையத்தில் உழவன் - ஜனசதாப்தி விரைவு ரயில்கள்: ஜூன் 1 முதல் நின்று செல்லும்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் தஞ்சாவூா் - சென்னை - தஞ்சாவூா் செல்லும் உழவன் விரைவு ரயில் , மயிலாடுதுறை - கோயம்புத்தூா் - மயிலாடுதுறை செல்லும்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் தஞ்சாவூா் - சென்னை - தஞ்சாவூா் செல்லும் உழவன் விரைவு ரயில் , மயிலாடுதுறை - கோயம்புத்தூா் - மயிலாடுதுறை செல்லும் ஜனசதாப்தி விரைவு ரயில் உள்ளிட்ட விரைவு ரயில்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும்.

இரண்டு விரைவு ரயில்களிலும் பயணிகள் பயணம் செய்ய பாபநாசம் ரயில் நிலையத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

உழவன் விரைவு ரயில் பாபநாசம் ரயில் நிலையத்தில் இரவு 10 மணிக்கும், ஜனசதாப்தி விரைவு ரயில் மதியம் 3.25 மணிக்கும் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com