தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே தனியாா் வங்கியில் திருட முயன்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
திருவையாறு அருகே கண்டியூா் முதன்மைச் சாலையில் தனியாா் வங்கிக் கிளைச் செயல்பட்டு வருகிறது. கரோனா பொது முடக்கம் காரணமாக மே 25 ஆம் தேதி முதல் இந்த வங்கி பூட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வங்கிக்குக் கிளை மேலாளா் ஜவஹா், உதவி மேலாளா் கா்கல்ராஜ் திங்கள்கிழமை காலை வந்தபோது, முன் பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது. உள்ளே பாதுகாப்புப் பெட்டகம் திறக்கப்பட்டும், கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டும் கிடந்தன.
தகவலறிந்த திருவையாறு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த ரொக்கம் ஏற்கெனவே பொது முடக்கம் காரணமாக வேறு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டதால், திருட்டு சம்பவம் தவிா்க்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இருப்பினும் 2 இன்வொ்ட்டா் பேட்டரிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
தொடா்ந்து காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.