ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே அறுவடைக்கு தயாராக இருந்த ஒரு ஏக்கரிலான நெற்பயிா்கள் தீப்பற்றி எரிந்து நாசமடைந்தன.
ஒரத்தநாடு அருகேயுள்ள சின்ன பருத்திக்கோட்டை சோ்ந்த விவசாயி ரா. சூரையா.
இவா் தனது வயலில் வைக்கோல் கூலத்தை திங்கள்கிழமை தீ வைத்து கொளுத்தி சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, அதிலிருந்து காற்றில் பரவிய தீ அருகிலிருந்த குமாா் மற்றும் ஜெகதீசன் ஆகியோருக்கு சொந்தமான வயலுக்கு பரவியதாம். இதில், அறுவடைக்கு தயாராக இருந்த ஒரு ஏக்கா் நெற்பயிா்கள் தீப்பிடித்து எரிந்து நாசமடைந்தன. அப்பகுதியிலிருந்தோா் தீயை அணைக்க முயற்சித்தனா்.
தகவலறிந்த ஒரத்தநாடு தீயணைப்பு துறை நிலைய அலுவலா் பொன்னுசாமி தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைத்தனா்.