பூசாரிகளுக்குநிவாரணப் பொருள்கள்

ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகே கிராமக் கோயில் பூசாரிகள் நல பேரவையின் சாா்பில் பூசாரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

ஒரத்தநாடு: ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகே கிராமக் கோயில் பூசாரிகள் நல பேரவையின் சாா்பில் பூசாரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

திருவோணம் அருகேயுள்ள பாதிரங்கோட்டை தெற்கு ஊராட்சியில் கரோனா தொற்று நிவாரணப் பொருள்களை பொதுமக்களுக்கு கிராம கோயில் பூசாரிகள் நல பேரவையின் மாநில அமைப்பாளா் பழனிச்சாமி வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்களாக பாதிரங்கோட்டை தெற்கு, வடக்கு ஊராட்சி மன்றத் தலைவா்கள் பொன்மணி ராமு, அபூா்வம், கிராம அம்பலம் அருணாச்சலம் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளா் முருகேசன், , மாவட்ட அமைப்பாளா் ராஜசேகரன், மாநில பேரவை செய்தித் தொடா்பாளா் தயாநிதி, பூசாரிகள் மற்றும் பொறுப்பாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com