பேராவூரணி: பேராவூரணி ஒன்றியம், பெரியநாயகிபுரம் ஊராட்சியில் ஹெவி லிப்ட் டிரோன் மூலம் திங்கள்கிழமை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கிராமப்பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பெரியநாயகிபுரம் ஊராட்சியில் தன்னாா்வலா்கள் மூலம் ஊராட்சிக்குள்பட்ட தெருக்களில் ஹெவி லிப்ட் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
ஊராட்சித் தலைவா் வத்சலா முத்துராமன் தலைமையில் ஊராட்சி தன்னாா்வலா்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனா்.