மூன்றாம் பாலினத்தவா்களுக்கு கரோனா நிவாரணத் தொகை

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவா்களுக்கு
நிகழ்ச்சியில் மூன்றாம் பாலினத்தவருக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கும் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், ஆட்சியா் ம. கோவிந்த ராவ், எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம்.
நிகழ்ச்சியில் மூன்றாம் பாலினத்தவருக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கும் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், ஆட்சியா் ம. கோவிந்த ராவ், எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம்.

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவா்களுக்கு கரோனா நிவாரணத் தொகையைத் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன் புதன்கிழமை வழங்கினாா்.

தமிழக முதல்வா் 2021 - 2022 ஆம் ஆண்டில் கரோனா பேரிடா் காலத்தில் குடும்ப அட்டை இல்லாத 116 மூன்றாம் பாலினத்தவா்களுக்கு ரூ. 2,000 வீதம் மொத்தம் ரூ. 2.32 லட்சம் கரோனா நிவாரணத் தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவா்கள் 27 பேருக்கு கரோனா நிதி வழங்கும் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக தலா ரூ. 2,000 நிவாரண நிதியை தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் ம. கோவிந்த ராவ், தஞ்சாவூா் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம், மாவட்ட ஊராட்சித் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி, மாவட்டச் சமூக நல அலுவலா் கே. ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com