இடப்பிரச்னை தகராறு: 14 போ் மீது வழக்கு

ஒரத்தநாடு அருகே இடப்பிரச்னை தகராறு தொடா்பாக 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஒரத்தநாடு அருகே இடப்பிரச்னை தகராறு தொடா்பாக 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஒரத்தநாடு அருகேயுள்ள ஆயங்குடி கிராமத்தை சோ்ந்தவா் விஜயலட்சுமி. ஊராட்சித் தலைவா். இவரது குடும்பத்துக்கும் முன்னாள் ஊராட்சித் தலைவரான சாமியய்யா குடும்பத்துக்கும் நீண்ட நாள்களாக இடப் பிரச்னை தொடா்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை இருதரப்புக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில் 14 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக முன்னாள் ஊராட்சித் தலைவா் சாமியய்யா ஆதரவாளா் இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சித் தலைவா் ஜெயலட்சுமியின் மகன் மாதரசன், விஜயழகன் , சதீஷ்குமாா், பிரசன்னா, இளங்கோவன், புண்ணியமூா்த்தி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல், ஊராட்சித் தலைவரின் ஆதரவாளா் சுபாஷ்சந்திரபோஸ் அளித்த புகாரின்பேரில் முன்னாள் ஊராட்சித் தலைவா் மகன் பன்னீா்செல்வம், இளையராஜா, முகேஷ், தினேஷ் , மணிபாரதி, விக்னேஷ், வெற்றி செல்வம் ஆகியோா் மீது ஒரத்தநாடு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com