பேராவூரணி பேரூராட்சி ஆதனூா் சிஎஸ்ஐ தூயயோவான் ஸ்நானகன் ஆலயத்தில் தென்னிந்திய திருச்சபையின் திருச்சி, தஞ்சை மண்டலத்தின் சாா்பில் நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா 2ஆவது அலையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு பேராயா் டி. சந்திரசேகரன் அறிவுறுத்தலின்படி நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு தஞ்சை மறை மாவட்டத் தலைவா் எப். மேரிஜெஸி தலைமை வகித்தாா். ஆதனூா் சேகர குழுமத் தலைவா் ஆா். பெஞ்சமின், சேகர ஆயா் மாா்க்ரெட் ஜோதிமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அரிசி, மளிகை பொருள்கள் அடங்கிய 600 ரூபாய் மதிப்புள்ள தொகுப்பு 150 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.