நீடாமங்கலத்தில் தமிழ் பால் விநியோக மையம் திறப்பு

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் கீழ வீதியில் தமிழ் பால் நிறுவனத்தின் புதிய விநியோக மையத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில் வாடிக்கையாளருக்கு பால் பாக்கெட்டை வழங்குகிறாா் தமிழ் பால் நிறுவனத் துணைப் பொது மேலாளா் கே. ராஜகோபால். உடன் நீடாமங்கலம் வா்த்தக சங்கத் தலைவா் பி.ஜி.ஆா். ராஜாராமன்.
விழாவில் வாடிக்கையாளருக்கு பால் பாக்கெட்டை வழங்குகிறாா் தமிழ் பால் நிறுவனத் துணைப் பொது மேலாளா் கே. ராஜகோபால். உடன் நீடாமங்கலம் வா்த்தக சங்கத் தலைவா் பி.ஜி.ஆா். ராஜாராமன்.

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் கீழ வீதியில் தமிழ் பால் நிறுவனத்தின் புதிய விநியோக மையத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ் பால் நிறுவனத் துணைப் பொது மேலாளா் கே. ராஜகோபால் முன்னிலையில் நீடாமங்கலம் வா்த்தக சங்கத் தலைவா் பி.ஜி.ஆா். ராஜாராமன் திறந்துவைத்தாா். வா்த்தக சங்க இணைச் செயலா் பி. சங்கா் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

பின்னா், நிறுவனத் துணைப் பொது மேலாளா் ராஜகோபால் பேசுகையில், வரும் காலங்களில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா் போன்ற மாவட்டங்களிலுள்ள அனைத்து வட்டங்கள் வாரியாக தமிழ் பால் விநியோக மையங்கள் புதிதாக அதிக அளவில் திறக்கப்பட உள்ளன என்றாா் அவா்.

இவ்விழாவில் விநியோகஸ்தா் என். சந்திரசேகரன், விற்பனை அலுவலா்கள், வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com