தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன் முன்னிலை வகித்தாா். ஒன்றியத் தலைவா் பாா்வதி சிவசங்கா் தலைமை வகித்து பேசும்போது, அனைத்து ஊராட்சிகளிலும் தடுப்பூசி போடாதவா்கள் குறித்து சுகாதாரத் துறை மூலம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அந்தந்த ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் மூலம் விடுபட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், காவல் துறையினா், சுகாதாரத் துறையினா், தீயணைப்புத் துறையினா் கலந்து கொண்டனா்.
நிறைவில், வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ் நன்றி கூறினாா்.